Monday 26 February 2018

நிலப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள எங்களை மந்திரி பெசார் சந்திக்காதது ஏன்? மக்கள் ஆவேசம்



சுங்கை சிப்புட்-

பல ஆண்டுகளாக நிலப் பிரச்சினையை வரும் மக்கள் 'எங்களின் பிரச்சினை மந்திரி பெசார் தீர்வு காணாதது ஏன்?' என ஆசேவக் குரல் எழுப்பியுள்ளனர்.

இங்குள்ள 8 கம்பங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக நிலத்திற்கும் வீடுகளுக்கும்  போராடி வரும் நிலையில் இன்னமும் அப்பிரச்சினைக்கு தீர்வு காணாதது குறித்து தங்களது ஆதகங்களை வெளிபடுத்தினர்.

இங்குள்ள கம்போங் பேராக் ஹைட்ரோ, கம்போங் பஹாரி, கம்போங் கோபால், கம்போங் வீராசாமி, கம்போங் ஜாலான் லிந்தாங், கம்போங் பெலாக்காங் சிங் சோங்,  கம்போங் சுங்கை பூலோ,கம்போங் பெங்காலி போன்ற குடியிருப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தங்களது போராட்டத்திற்கு எப்போது தீர்வு காணப்படும் என வினவினர்.

இன்று பேராக் ஹைட்ரோ குடியிருப்புப் பகுதியில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களான குடியிருப்பாளர்கள் கல்யாணகுமார், கணேசன், திருமதி தேவி உட்பட பலர், தங்களின் நிலப்பிரச்சினை குறித்து மந்திரி பெசாரின் கவனத்திற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளோம்.

ஆனால் இன்னமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் காலதாமதம் செய்யும் மாநில மந்திரி பெசாரின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் காலங்களில் மட்டுமே எங்களின் பிரச்சினை குறித்து இனிப்பான வாக்குறுதிகளை வழங்கியவகள் அதன் பிறகு எங்கள் பக்கமே திரும்பி பார்க்கவ்வில்லை  என அவர்கள் கூறினர்.

எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும், நாங்கள் சொந்த இல்லங்களில் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதற்கும்வழியில்லாமல் பெரும் வேதனையுடனே தவித்துக் கொண்டிருக்கிறோம் என பல குடியிருப்பாளர்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

மேலும் இங்குள்ள மக்களின் நிலப்பிரச்சினை குறித்து மாநில மந்திரின் கவனத்திற்கு 10க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளோம். ஆனால் எந்தவொரு கடிதத்திற்கும் இன்னமும் ஆக்ககரமான நடவடிக்கை இல்லை என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

தனியார் நிலங்களில் வாழும் மக்கள் எந்நேரத்திலும் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்பதோடு பலர் அரசாங்க நிலத்தில் குடியிருந்தும் இன்னமும் பிரச்சினைக்கு தீர்வில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அதற்கு பேராக் மாநில மந்திரி பெசார் துரிதமாக செயல்பட்டு தீர்வு காண முற்பட வேண்டும்.

இல்லையேல் மக்களின் மாவட்ட நில அலுவலம் முன்பு மிகப் பெரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அவர் சொன்னார்.

இந்த சந்திப்பில் பல்வேறு கிராமங்களின் குடியிருப்பாளர்களும் பிஎஸ்எம் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment