Wednesday 28 February 2018

"அரசியல் சூழல் முழுவதுமாக மாறியுள்ளது"; சேவை செய்பவர்களையே 'மக்கள் பிரதிநிதியாக' வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பர் - டான்ஶ்ரீ கேவியஸ்


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

கேமரன் மலை-
2004ஆம் ஆண்டுக்கு முன்னதாக இருந்த சூழல் வேறு, தற்போதைய சூழல் வேறு என்பதை தேசிய முன்னனியின் உறுப்புக் கட்சிகள் உணர வேண்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.

மலேசிய அரசியல் சூழல் 2004ஆம் ஆண்டு வரை தேசிய முன்னணிக்கு பிரகாசமான வாய்ப்பாகவே இருந்தது. ஆனால் 2004ஆம் ஆண்டு அதன் பிரகாசம் குன்ற தொடங்கியது.

2008, 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு எதிர்பான ஒரு சூழலையே நாம் உணர முடிந்தது. இன்றைய சூழலில் அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை உணர வேண்டும்.

மக்களின் மனநிலையில் இன்று பலவாறாக மாறிவிட்டது. தங்களுடைய  'மக்கள் பிரதிநிதி' யார் என்பதை மக்கள் சிந்தித்து தேர்ந்தெடுக்கக்கூடிய காலமாக தற்போதைய அரசியல் சூழல் மாறிவிட்டது.

மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றுபவர்களையே இன்றைய 'வாக்காளர்கள்' விரும்பக்கூடிய சூழலில் அலுவலகங்களில் உட்கார்ந்துக் கொண்டு திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதால் மட்டும் வாக்காளர்களை கவர்ந்து விட முடியாது.

அதிலும் குறிப்பாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி சேவையாற்றுபவர்களாலேயே இத்தொகுதியை வென்றெடுக்க முடியும். அதை விடுத்து வெறும்  திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பவர்களால் மண்ணை மட்டுமே கவ்வ முடியும்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி ஜெயிக்க வேண்டுமென்றால் 'நானே சிறந்த வேட்பாளர்' என விவரித்த டான்ஶ்ரீ கேவியஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு சேவையாற்றி வரும் தனக்கு மக்களின் ஆதரவு வலுவாக உள்ளது.

என்னை தவிர வேறு யாராலும் சிறந்த வேட்பாளராக இங்கு களமிறங்க முடியாது; ஜெயிக்கவும் முடியாது என 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின்போது அவர் தெரிவித்தார்.

இவருடனான சிறப்பு நேர்காணல் நாளை முதல் 'மை பாரதம்' மின்னியல் அகப்பக்கத்தில் இடம்பெறும்

No comments:

Post a Comment