Wednesday 28 February 2018

பிஐசிசி ஏற்பாட்டில் 132 மகளிருக்கு சமையல், தையல் பயிற்சிகள்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேராக் இந்திய வர்த்தக சபை  (பிஐசிசி) அண்மையில் முன்னெடுத்த பயிற்சி திட்டங்களின் வழி 132 மகளிர்கள் பயனடைந்துள்ளனர்.

மகளிர் மேம்பாட்டு இலாகாவுடன் இணைந்து பிஐசிசி மேற்கொண்ட தையல்,
சமையல் பயிற்சிகள் 132 பேருக்கு வழங்கப்பட்டது.

அதில் 12 பேர் தையல் பயிற்சி 6 மாத காலத்திற்கு வழங்கப்பட்டது எனவும் 120 பேர் சமையல் பயிற்சியை கடந்த 3 மாதங்களாக பயிற்சியை மேற்கொண்டனர் எனவும் அதன் தலைவர் சுல்தான் அப்துல் காதீர் தெரிவித்தார்.

இங்குள்ள பிராக்சிஸ் கல்லூரியில் வழங்கப்பட்ட பயிற்சியின் மூலம்
இவர்கள் சமையல், தையல் பயிற்சிகளை முழுமையாக கற்றுக் கொண்டுள்ளதோடு அதனை சுயத் தொழிலாகவும் மேற்கொள்ளும் திறனை பெற்றுள்ளனர்.

தங்களின் பகுதி நேரத் தொழிலாக கூட இப்பெண்கள் இதில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம் என கூறிய அவர், இவர்களின் பயிற்சிகாக மகளிர் மேம்பாட்டு இலாகா வழங்கிய நிதி போதவில்லை எனவும் சில நடவடிக்கைகளுக்கு பிஐசிசியே செலவு செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிஐசிசி மேற்கொள்ளும் நிகழ்வுகள் ஆக்கப்பூர்வமானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருப்பதால் அடுத்த நிகழ்வுகளுக்கு மகளிர் மேம்பாட்டு இலாகா கூடுதல் நிகழ்வை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அண்மையில் பிராக்சிஸ் கல்லூரியில் நடைபெற்ற சமையல் கலை பயிற்சி இறுதிச் சுற்று நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்நிகழ்வில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிஐசிசி முன்னாள் தலைவர் கேசவன், பேராக் குடும்ப, மகளிர்
மேம்பாட்டுத் துறை  இயக்குனர் கெளரம்மா, உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment