Sunday 25 February 2018

முன்னாள் பத்திரிகையாளர் சுப்பிரமணியம் காலமானார்

கம்பார்-
பேராக், கம்பார் வட்டார 'தமிழ் நேசன்' முன்னாள் நிருபர்  டி. சுப்பிரமணியம் இன்று  அதிகாலை காலமானார்.

தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் நிருபராக   பணியாற்றிய அமரர் சுப்பிரமணியம்  அண்மைய காலமாக நோய்வாய்பட்டு கிடந்த நிலையில் சிகிச்சைக்காக ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நிருபராக மட்டுமின்றி கம்பார் தொகுதி மஇகா செயலாளராகவும் கம்பார் மாவட்ட மன்ற உறுப்பினராகவும்  சேவையாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 2.00 மணிக்கு எண்.27, ஜாலான் 5, தாமான் ஶ்ரீ மாஸ், கம்பார் எனும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment