Saturday 24 February 2018

மே மாதம் வரை போலீஸ்காரர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகள் முடக்கம்



கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அரச மலேசிய போலீஸ் படையினர் விண்ணப்பித்திருந்த விடுமுறைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நிர்வாக இலாகாவின் இயக்குனர் ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் கஃபார் ரஜாப் தெரிவித்தார்.

புதன்கிழமை தொடங்கி மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை இந்த விடுமுறை முடக்கம் அமலில் இருக்கும் என  தெரிவித்த அவர், இது உய்ரமட்ட தலைவர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதோடு பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு உள்நாட்டு
பயண விடுமுறைகள் உட்பட அனைத்து விடுமுறைகளும் முடக்கப்படும். ஆனால் புக்கிட் அமான் இயக்குனர்களின் வேலை தொடர்பான பயணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment