Sunday 25 February 2018

அனுபவமும் நுணுக்கமுமே ஒரு துறையில் நம்மை மிளிர வைக்கும்- அறிவிப்பாளர் ஜீவன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒரு துறையில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் நமது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்கிறார் சஹாரா ஒலி, ஒளியமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜீவன்.

ஏற்றம், இறக்கம் நிறைந்ததே சொந்த தொழில். அதில் நமது உழைப்பும் முயற்சியும் பொறுத்தே வெற்றி அமைகிறது. ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் அதன் நுணுக்கங்களை அறிந்து கொண்டு செயலாற்றுவதே சிறப்பானதாக அமையும் என்கிறார் அவர்.

ஒலி, ஒளியமைப்பு துறையில் மட்டுமல்லாது அறிவிப்பாளர் பணியிலும் மிளிரும் ஜீவனுடன் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கே: உங்களை பற்றி?

ப: பள்ளி வாழ்க்கை முடிந்த பின்பு கொஞ்ச நாள் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு வாழ்க்கையை நகர்தத வருமானம் வேண்டுமென கொஞ்ச நாள் கெந்திங் பகுதியில் பணியாற்றினேன். அதன் பிறகு மனைவி, பிள்ளைகள் ஈப்போவில் இருப்பதால் ஒரு கட்டாயத்தின் சூழலில் ஈப்போவுக்கே வந்துவிட்டேன்.

இங்கு வந்தவுடன் ஒரு பஞ்சாபி நண்பர் அறிமுகத்தோடு நாங்கள் இருவரும் ஒலி, ஒளியமைப்பு பணியை சிறிதாக ஆரபித்து அதன் பிறகு அதில் முழுமையாக ஈடுபட தொடங்கினோம்

 படிபடியாக ஒலி, ஒளியமைப்பு சிஸ்டத்தை முறையாக தொடங்கி எனக்கு கீழ் 5 வேலையாட்கள், 2 லோரிகளுடன் மலேசிய முழுவதும் உள்ள நிகழ்வுகளில் அசத்தி வருகிறோம் என்று கூறுவதில் மிகையாகாது.

கே: இந்த  துறையில் ஈடுபட   எவ்வாறு ஆர்வம் வந்தது? 

ப: சிறு வயதில் இருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனது 10ஆவது வயதில்  என் அண்ணன் நடராஜாவுடன்  கலைமகள் ஆட்ஸ் இசைக்குழுவில் இணைந்து  அனுபவம் பெற, பின்பு  அதுவே இப்போது எனது பணியாக மாறிவிட்டது.

கே: ஒலி. ஒளியமைப்பு துறையில் நீங்கள் ஈடுபட்ட பிறகு உங்கள் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியது?
மனைவியுடன் ஜீவன்...
: தொடக்கத்தில் 200 வெள்ளி, 250 வெள்ளி என தொடங்கிய ஒலி, ஒளியமைப்பு பணி,  இன்று படிபடியாக முன்னேற்றம் கண்டு வருமானம் ஈட்டும் தொழிலாகவும் உருமாற்றி கொண்டேன்.   பின்பு அறிவிப்பாளராகவும் வலம் வர தொடங்கினேன்.

சில சமயங்களில் சொந்த தொழில் என்றாலே ஏற்றம், இறக்கம் இருக்கத்தானே செய்யும். அதையும் தாண்டி ஒலி, ஒளியமைப்புத் துறையில் பயணிக்கின்றேன்.

இப்போது உள்ள காலகட்டத்தில் அடுத்தவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட நமக்கு தெரிந்த தொழிலில் முன்னேற்றம் காண்பதே சிறப்பு

கே: இந்த துறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்ல வருவது?

ப: நான் இந்த ஒலி, ஒளியமைப்பு துறைக்கு  வருவதற்கு முன்பு ஈப்போவில் இத்துறை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட பிறகு சிலவற்றை  தவிர்த்து,  மக்கள் விரும்பும் வண்ணத்தில் ஒலி ஒளியமைப்பு,  அறிவிப்புகளை புதிய சிந்தனையில், புதிய அணுகுமுறைகளை கையாண்டேன்.

அந்த நடவடிக்கையே  இன்று சஹாரா
என்டெர்டெய்ன்மென்ட்  ஒலி, ஒளியமைப்பு புகழ்பெற்று விளங்குவதற்கு காரணமாகும்.  இதைப்பொன்று மற்றவர்கள்களும் கையாண்டு வந்தால் அனைவரும் சிறப்பான முறையில் இந்த துறையில் மிளிரலாம்.

  - தொடரும்....-

No comments:

Post a Comment