Monday 26 February 2018

தமிழ் திரையுலக 'மயிலு ' ஶ்ரீதேவி மரணம்; தலைவர்கள், நடிகர்கள் அனுதாபம்




புதுடெல்லி-
தமிழ், இந்தி உட்பட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகை ஶ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தது திரைப்பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் 'மயிலாக' மனதில் உலா வந்ஹ ஶ்ரீதேவி 'மூன்றாம் பிறை', 'வாழ்வே மாயம்' உட்பட பல திரைப்படங்களில் ரஜினி, கமல்ஹாசன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் நடித்து புகழின்  உச்சியை அடைந்தார்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பதிலிருந்து விலகியிருந்த நடிகை ஶ்ரீதேவி, 'இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் நேற்று துபாயில் நடைபெற்ற உறவினரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானர்.

நடிகை ஶ்ரீதேவியின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், "ஸ்ரீதேவி மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். மூன்றாம் பிறை, லம்ஹே, இங்க்லீஸ் விங்லீஸ் ஆகிய படங்களில் அவர் நடித்தது மற்ற நடிகர்களுக்கான முன்னுதாரணமாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஸ்ரீதேவியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. திரையுலகில் பண்முக திறமையை வெளிக்காட்டியவர். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மறக்கமுடியாத நினைவலைகளை பதிவு செய்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என இரங்கலை பதிவு செய்தார்.

நடிகர்கள்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர் பாரதிராஜா, நடிகைகள் கெளதமி, திரிஷா, பிரீத்தா ஜிந்தா, பிரியங்கா சோப்ரா உட்பட  பலர் டுவிட்டர் மூலம் தங்களது அனுதாபத்தை  தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment