Saturday 24 February 2018

வசந்தபிரியா விவகாரம்; ஆசிரியர் மீது கல்வி இலாகா இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - டேவிட் மார்ஷல்


ஜோர்ஜ்டவுன்-
மாணவி வசந்தபிரியா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது பினாங்கு மாநில கல்வி இலாகா இன்னும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியரின் கைப்பேசியை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டாம் படிவ மாணவி வசந்தபிரியா கடந்த ஜனவரி 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இம்மாதம் 1ஆம் தேதி மரணமடைந்தார்.

வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தகவல்களுக்கான காத்திருப்பதாக மாநில கல்வி இலாகா கூறுகிறது.

நிரந்தர வழிகாட்டி செயல்முறையின் (எஸ்ஓபி) கீழ் மாநில கல்வி இலாகா சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்க எடுக்கலாம் என நம்புகிறோம்.
ஆனால் எதற்காக போலீசாரின் அறிக்கைக்காக கல்வி இலாகா காத்துக் கொண்டிருக்கிறது?

இவ்விவகாரம் தொடர்பில் கல்வி இலாகாவின் நடவடிக்கைகளை அறிய விரும்புகிறோம். ஆசிரியரின் நடவடிக்கையில் தவறு நடந்துள்ளதை கண்டறிந்தால் எங்களுக்கு அது தொடர்பில் தெரிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக டேவிட் மார்ஷல் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment