Tuesday 27 February 2018

பலகாரங்களை வியாபாரம் செய்யும் சாந்திக்கு உதவிட சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு முன்வந்தது


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தாமான் லிந்தாங் பகுதியில் பல மாதங்களாக பலகாரங்களை வியாபாரம் செய்து வரும் திருமதி ரா.சாந்தி வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு  உதவிக்கரம் நீட்ட முன்வந்தது.

இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்கு ஏதுவாக யயாசான் பினா உபாயாவின்  உதவியை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அதன் தலைவர் மு.நேருஜி தெரிவித்தார்.

தற்போது நிறுவனப் பதிவை  மேற்கொள்ளுமாறும் அதற்கு பிறகு அரசு இலாகாக்களின் வழி சில உதவிகளை மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

சொந்த வியாபாரத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள முடியும் என முயற்சிப்பவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவு என்றுமே துணை நிற்கும் என பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான நேருஜி குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கையின்போது சுங்கை சிப்புட்  மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு   துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரன், செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் லெட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment