Friday 23 February 2018

கிராமிய நடனப்போட்டியில் கிரேட் எண்ட் கோல்ட் வெற்றி வாகை சூடினர்!


ஒரு காலத்தில் 1000க்கும் மேற்ப்பட்ட கிராமிய நடனங்கள் இருந்த வேளையில் தற்பொழுது 20க்கும் மேற்பட்ட நடனங்கள் மட்டுமே உள்ளது. அதனை நமது இளைய சங்கதியினர்கள் வளர்க்க வழிவகுக்கும் வகையில் மலேசிய கலை உலகம் கிராமிய நடனப் போட்டியினை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நவின காலத்தில் கிராமிய பாடல்களும் நடனங்களும் மறைந்து வருகின்ற வேளையில் மலேசிய கலை உலகம் அண்மையில் ஆடவரலாம் 2.0. எனும் கிராமிய நடனப் போட்டி இங்குள்ள டெம்பல் ஆஃப் பைன் ஆர்டஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கிராமிய நடனத்திற்கு நம் ஆதரவு வழங்க வேண்டும். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அறிது, ஆனால் அப்படி அமையும் இதுபோன்ற வாய்ப்புகளை சரியான முறையில் நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளின் வழி வளரும் என நிகழ்வில் சிறப்பு வருகையாளர் டத்தோ தி.மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக உள்ளூர் கலைஞரும் கிராமிய நடனக் கலைஞர் பறவை முனியம்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மலேசிய கலை உலகம் எஸ்.பி. பிரபா மற்றும் நாட்டின் மூத்தக்கலைஞர் கே.எஸ். மணியம் வழங்கிச் சிறப்பித்தனர்.

ஆடவரலாம் 2.0. நல்ல திட்டம். நம் கலை கலாச்சாரமும் பண்பாடும் வளர வாய்ப்புள்ளது. நம் கலை கலாச்சாரங்கள் தமிழ்ப்பள்ளிகளில் வளர இத்திட்டத்தை கொண்டுச் சென்றால் அதற்க்கு நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன் என தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் கலைத்துறை மிகப்பெரிய பரிணாமங்கள் கண்டு வருகின்றன. மேலும், 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு சினிமாவுக்கு ஈடாக நம் நாட்டு சினிமா அமையும் என்பதில் ஐயமில்லை என மலேசிய கலை உலகம் அதிகாரப்பூர்வ காணொளியை தொடக்கி வைத்த பின்னர் அவரது முடிவுரையில் கூறினார்.


இப்போட்டியில் ஐந்தாவது இடத்தை ஸ்வாகர் டன்ஸர், நான்காவது இடத்தை ரியான ஆர்ட்ஸ், முன்றாவது இடத்தை அபிநேய தென்றல், இரண்டாவது இடத்தை கேவியஸ் கிரியேசன்ஸ், முதலாம் இடத்தை கிரேட் என்ட் கோல்ட் தட்டிச் சென்றனர். 

வெற்றியாளர்களுக்கு பரிசுகளை நிகழ்வின் சிறப்பு வருகையாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் எடுத்து வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வை தமிழ்வாணி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மேலும், ஐந்தாம் ஆறாம் இடத்தை வென்ற குழுவினர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கினர். முன்றாம் இடத்தை வென்ற குழுவினருக்கு ரிம.1000 வெள்ளியும், இரண்டாம் நிலையை வென்ற குழுவிற்கு ரிம.2000 வெள்ளியும், முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம.3000 வெள்ளியும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், முதல் நிலை வாகை சூடிய கிரேட் எண்ட் கோல்ட் குழுவினருக்கு வெற்றி கேடயமும் மர்ம பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு செனட்டர் டத்தோ தி.மோகன், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன், இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பார் அமைப்பின் தலைவர் டத்தோ சந்திரகுமணன், உள்ளூர் கலைஞர் தமிழ்செல்வம், உள்ளூர் கலைஞர்கள், தயாரிப்பாளர்களும் பொதுமக்களும் கலந்துச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment