Friday 23 February 2018

'மிகப் பெரிய மக்கள் தொகை மலேசியாவுக்கு தேவைபடுகிறது'- பிரதமர் நஜிப்


கோலாலம்பூர்-
'மலேசியாவுக்கு மிகப் பெரிய மக்கள் தொகை தேவைபடுகிறது. ஆதலால் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள தகுதி வாய்ந்த வயதில் உள்ள மலேசியர்கள் தொடர்ந்து பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள்' என பிரதமர் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவுறுத்தினார்.

வழக்கமாக நாட்டின் பொருளாதார முதிர்ச்சி பிறப்பு விகிதத்தை குறைக்கும். அதே போன்றதொரு சூழலைதான் மலேசியா எதிர்நோக்கியுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு நாட்டுக்கு அவசியமாகிறது என்பதால் பிள்ளைகளைம் பெற்றுக் கொள்ள தகுதி வாய்ந்த மலேசியர்கள் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கேற்ப அமானா டானா அனாக் மலேசியா 2050 அல்லது ஏடாம் 50 திட்டங்கள் மலேசியர்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கப்படுத்தும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக  பிரதமர் நஜிப் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment