Friday 23 February 2018

அறிவிப்பாளர் பணியில் 'மக்கள் கவர்ந்த நாயகன்' ஜீவன்


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஒவ்வொரு இனிய நிகழ்வுகளும் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தால்தான் அந்த இடமே மிகவும் கலகலப்பாக காணப்படும். திருமணமாகட்டும், பிறந்தநாளாகட்டும், ஏன் ஆலய திருவிழா என்றால் கூட கலகலப்பு கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பு ஒலி, ஒளியமைப்பு கலைஞரையே (DJ) சாரும்.

ஒலி, ஒளியமைப்பு, அறிவிப்பாளர் பணியை அவ்வளவு எளிதில் யாராலும் கையாள முடியாது. அதன் நுணுக்கங்களை அறிந்தவர்களே அதனை திறம்பட வழிநடத்த முடியும் என்ற நிலையில் நிகழ்வுக்கு வரும் கூட்டத்தினரை தன் வசம் ஈர்ப்பதிலும் அவர்கள் திறமையாளர்களாக விளங்கிட வேண்டும்.

அவ்வகையில் ஈப்போ வட்டாரத்தில் நன்கு ஒலி, ஒளியமைப்பு,  அறிவிப்பாளர் பணியை நன்கு செய்வதில் புகழ் பெற்று விளங்குகிறார் டிஜே ஜீவன்.

சஹாரா ஒலி, ஒளியமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்லாது, அறிவிப்பாளர் பணியை திறம்பட கையாளும் ஜீவன், மக்கள் விரும்பும் வண்ணம் திறமையாக,புதுமையான முறையில் மேற்கொண்டு வருகிறார்.

அறிவிப்பாளர் பணி மட்டுமல்லாது முன்பு மோட்டார் பந்தய வீரராக திகழ்ந்த ஜீவனுடனான சிறப்பு சந்திப்பு விரைவில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தின் இடம்பெறும்.

No comments:

Post a Comment