Sunday 25 February 2018

விபத்தில் சிக்கிய எவ்லின் ஆங் உயிர்காப்பு இயந்திரத்தை நிறுத்திட குடும்பத்தினர் முடிவு


கோலாலம்பூர்-

விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எவ்லின் ஆங்கின் உயிர்காப்பு இயந்திரத்தை நிறுத்தி விட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடட்ந்த நெடுந்தூர ஓட்ட போட்டியின்போது எவ்லின் ஆங் உட்பட மூவர் காரினால் மோதி தள்ளப்பட்டனர்.

இத்தனை நாட்களும் மருத்துவமனையில் சுயநினைவின்றி  இருந்த வந்த எவ்லின் ஆங்கின் உயிர்காப்பு இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்திட குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அவர் மூளை சாவடைந்து விட்ட நிலையில்  உடல் உறுப்புகள் செயல்பாடுகள் இல்லாமல் போய்விட்டது. உடல் செயல்படவில்லை என்பதை இதயம் உணரும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவர்கள் கூறினர் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கு பின்னர் 11 முறை அவருக்கு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளன. அவருடைய மூளையில்  ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. எலும்புகளில் கடுமையான முறிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களில் மட்டும் அவருக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவரின் ஆலோசனைபடி உயிர்காப்பு இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்து அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுக்க முடிவு செய்து விட்டோம் என குடும்பத்தினர்  வேதனையுடன் குறிப்பிட்டனர்.

எவ்லின் குடும்பத்தினரின் இந்த முடிவு மலேசியர்களின் மத்தியின் கடுமையாக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, எல்வின் ஆங் உட்படமூவரை மோதி தள்ளிய 27 வயதான
தியோ தியோன் லிம் மீது கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment