Thursday 28 September 2017

மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு உயரிய பதவி வழங்குக- தாஸ் அந்தோணிசாமி கோரிக்கை

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தேசிய முன்னணியில் தோழமைக் கட்சியாக இடம்பெற்றுள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஓர் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் கட்சியின் மக்கள் பணி தீவிரப்படுத்தப்படும் என சுங்கை சிப்புட் தொகுதி மமச கட்சித் தலைவர் தாஸ் அந்தோணிசாமி வலியுறுத்தினார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தேவையான சேவையை மலேசிய மக்கள் சக்தி கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆலயம், பள்ளிக்கூடம், சமூகநல உதவி, மாணவர்களுக்கு கல்விநிதி உதவி என பல சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆயினும் இக்கட்சிக்கு இன்னமும் ஓர் உரிய பதவிகள் வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனுக்கு உயரிய பதவி வழங்கப்பட வேண்டும்.

செனட்டர், துணை அமைச்சர் போன்ற பதவிகளை வழங்குவதன் மூலம் கட்சி இன்னும் துடிப்புடன் செயல்படுவதோடு இன்னும் இந்தியர்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த முடியும் என தாஸ் அந்தோணிசாமி கூறினார்.

No comments:

Post a Comment