Saturday 23 September 2017

சிறைச்சாலைக்குச் சென்று கொண்டிருந்த அன்வாரின் கார் விபத்துக்குள்ளானது

சுங்கை பூலோ-
சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு செல்லும் வழியில் எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாகனம் விபத்துக்குள்ளானது.

கடந்த நான்கு நாட்களாக கோலாலம்பூர் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சிகிச்சை முடிந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சுங்கை பூலோ, செளஜானா உத்தாமாவில் நிகழ்ந்தது என அவரின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா கூறினார்.

சிறைச்சாலை அதிகாரி ஓட்டிச் சென்ற இந்த வாகனம் மற்றொரு
வாகனத்துடன் மோதுவதை தவிர்த்தபோது விபத்துக்குள்ளானது. செளஜானா உத்தாமா சமிஞ்சை விளக்கு சந்திப்பில் இச்சம்பவம் நிகழ்ந்து.

இதில் அன்வார் காயமடையவில்லை. சுங்கை பூலோ சிறைச்சாலை மருத்துவரின் சோதனைக்குப் பிறகு வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment