Tuesday 26 September 2017

தீ விபத்து: 9 லோரிகள் எரிந்து நாசமாகின

ஷா ஆலம்-
தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த கோர தீச்சம்பவத்தில் 9 லோரிகள் தீயில் எரிந்து நாசமாகின.

இங்கு புக்கிட் கெமுனிங்கில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை 12.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 7 லோரிகளும் 2 டிரெய்லர் லோரிகளும் தீக்கிரையாயின.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் காலை 5.00 மணியளவவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என அதன் நிர்வாக அதிகாரி அலி மட்டியா புக்ரி தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ கொளுந்து விட்டு எரிந்தது எனவும் தொழிற்சாலைக்கு வெளியே சில லோரிகள் எரிந்து கொண்டிருந்தாகவும் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் சொன்னார்.

இந்த தீச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment