Friday 22 September 2017

மெக்சிகோவில் நிலநடுக்கம்; டத்தோஶ்ரீ நஜிப் இரங்கல்

கோலாலம்பூர்,
மெக்சிகோ நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் அந்நாட்டின் அரசாங்கத்திற்கும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தமது இரங்கலை தெரிவித்து கொண்டார்.
“நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பிரதமர் தமது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நேற்று மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment