Wednesday 27 September 2017

அரசியலில் குதித்தால் சினிமாவுக்கு முழுக்கு- நடிகர் கமல்


சென்னை-
தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல. நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன். ஆதலால் அரசியலுக்கு நுழைந்தால் சினிமாவுக்கு முழுக்கு போட வேண்டி வரும்.

அதோடு, நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன்.

அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை. நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளேன்.


தேர்தலில் நான் எங்கே போட்டியிடுவது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளைத்தான் தேர்வு செய்வேன் என்றார்.
அண்மைய காலமாக தமிழக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வரும் நடிகர் கமல், சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவது உறுதி என பகிரங்கமாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment