Tuesday 26 September 2017

டத்தோ புலவேந்திரனின் மாமியார் பச்சையம்மா காலமானார்

செபெராங் ஜெயா-
அனைவரையும் அரவணைத்து அன்பாக வழிநடத்திச் செல்பவர் , எங்களின் குறைகளை நிவர்த்தி செய்பவர் ,விரைவில் எங்களை விட்டுச் செல்வார் என நாங்கள் நம்பவில்லை.  அன்பான பொக்கிஷத்தை இழந்து விட்டேன் .என டத்தோ புலவேந்திரன் கண்ணீரோடு தெரிவித்தார்

நேற்று முன்தினம் டத்தோ புலவேந்திரனின் மாமியார் திருமதி பச்சையம்மா த/பெ துரைசாமி என்ற சாந்தா (வயது 69) உடல் நல  குறைவினால் பேராக், ஹல்ட் சிம்பாங்கிலுள்ள  தமது இல்லத்தில் காலமானார் .
மரணமடைந்த திருமதி பச்சையம்மா நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பினாங்கு மாநிலம் உட்பட பேராக்,கோலாலம்பூர் என பல இடங்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர்.

தோட்டப்புற வாழ்கையாக இருந்தாலும் கூட என் தாய் தந்தையர் எங்களை சிறப்பாக வளர்த்தனர். ஐந்து பிள்ளைகளில் ஒருவர் காலம் சென்ற நிலையில் நால்வர்களையும் சிறப்பாக வளர்த்தனர். அன்பு, ஒழுக்கம் , பண்பு  போன்றவற்றை கற்றுக் கொடுத்ததன் விளைவாக சிறந்தவளாக வளர்த்து நிற்கும் தமது வெற்றியை காண அவரின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. என் அம்மாவிற்கு ஈடு ஏதும் இல்லை என  டத்தின் கமலேஸ்வரி வேதனையுடன் தெரிவித்தார் .
அன்னாரின் நல்லுடல் இந்து ஆகமபடி நடைபெற்ற இறுதி சடங்குகளுக்கு பின்னர், தைப்பிங் பொக்கோ அசாம் மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது .

No comments:

Post a Comment