Wednesday 27 September 2017

முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை- டான்ஶ்ரீ நோ ஒமார்

ஷா ஆலம்-
முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு  அரசாங்கம் தடை விதிக்கவில்லை. ஆயினும் அதனை ஒரு விழாவாக கொண்டாடுவதன் அவசியம் என்ன? என்று சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஶ்ரீ நோ ஒமார் வினவினார்.

இதற்கு முன்னர் மது அருந்தும் விழாவை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்த அவர், முஸ்லீம் அல்லாதவர்களின் இதுபோன்ற விழாவினால் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

முன்பு பண்டாமாரானில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள் மதுபானங்களை அருந்தி கொண்டிருந்தனர். இது தவறான ஒன்றல்ல. ஏனெனில் அங்கு முஸ்லீம் அல்லாதவர்களே பெரும்பான்மையாக இருந்தனர்.

ஆனாலும், மதுபானம் அருந்துவதை  ஒரு விழாவாக நடத்துவது ஏன்?, இங்கு அதனை விளம்பரப்படுத்த நாம் அவற்றை (மதுபானங்களை) ஏற்றுமதி செய்கிறோமா?, இருந்தாலும் அதனை ஓர் அரசியல் சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் 'பெட்டர் பீர் 2017' விழா ரத்து செய்யப்பட்டது தொடர்பில் கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment