Wednesday 27 September 2017

இந்தியர்கள் ஓரங்கட்டப்படகூடாது -பேராசிரியர் பி.இராமசாமி


சுகுணா முனியாண்டி 
பட்டர்வொர்த்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் இந்நாட்டின் சட்டப்பூர்வ பிரஜைகள் என்ற நிலையில் மதிப்பளிக்கப்படவேண்டும். இனம் அல்லது மத ரீதியில் ஓரங்கட்டபடக்கூடாது என்பதை தேசிய முண்ணி அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நினைவுறுத்தினார் .

கடந்த  ஞாயிற்றுக்கிழமை  நடந்த மஇகாவின் பேராளர் மாநாட்டில் தாம் 'இந்தியர்களின் மேம்பாட்டு தந்தை' என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கூறிருப்பது தமக்கு வியப்பை தருவதாக கூறிய அவர் , இந்நாட்டு இந்தியர்கள் பொருளாதார ரீதியில் கண்டுள்ள வளர்ச்சி என்னவென்பதை இந்தியர்களை ப் பரதிநிதிப்பதாக கூறும் மஇகா விளக்கம் கொடுக்க முடியுமா?  என ஜசெ க துணைப் பொதுச் செயளாளருமான அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டின 14ஆவது  பொதுத் தேர்தல்  நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தேசிய முன்ணனி அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் தருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் .

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வரும் அம்னோ தலைமையிலான தேசிய முன்ணணி அரசாங்கம் இந்திய சமூக பொருளாதார நிலை மாற்றப்படவும் இல்லை; உயர்த்தப்படவும் இல்லை என்பதுதான் உண்மை என மேலும் கூறினார் .

அம்னோ ஆதிக்கத்தில் இருப்பதனால் மஇகாவினால் இந்திய சமூகத்திற்கு எந்தவோர் ஆக்கப்பூர்வ மேம்பாடு, பொருளாதாரத் திட்டங்களை அமலுக்கு கொண்டுவர இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment