Wednesday 27 September 2017

முன்னாள் மந்திரி பெசார்களின் ஒருங்கிணைப்பு 'தோல்வி காணும் வியூகம்'

ஷா ஆலம்-
முன்னாள் மந்திரி பெசார் மூவர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பியுள்ளதால் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய மீட்டெடுக்கலாம் என்ற வியூகம் பழைமையானது என்பதோடு இது தோல்வியையே தழுவும் என பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.

டான்ஶ்ரீ முகம்மட் முகம்மட் தாய்ப், டான்ஶ்ரீ அபு ஹசான் ஒமார், டாக்டர் முகமட் கிர் தோயோ ஆகிய மூவரை சுட்டி காட்டி, இம்மூவர் மட்டுமே சிலாங்கூர் மாநில அரசில் இடம்பெறவில்லை, மாறாக வாக்காளர்களும் சிலாங்கூர் மக்களும் உள்ளனர் என பக்காத்தான் ஹராப்பானின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

மக்கள் இப்போது தெளிவான சிந்தனையில் உள்ளனர், நம்பிக்கைக்குரிய வாக்காளர்களை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
இரு தவணைகளாக இம்மாநிலத்தை வெற்றி பெற முடியாத தேசிய முன்னணி, குறுக்கு வழியில் மாநில அரசை கைப்பற்ற நினைக்கக்கூடாது என்றார் அவர்.

இதற்கு முன்னர் கருத்துரைத்த சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஶ்ரீ நோ ஒமார், இம்மூவரும் அம்னோவுக்கு மீண்டும் திரும்பியுள்ளது வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்ற வழிவகுக்கும் என கூறியிருந்தார்.

No comments:

Post a Comment