Friday 29 September 2017

நவீன் கொலை வழக்கு: டிசம்பர் 6க்கு ஒத்திவைப்பு


ஜோர்ஜ்டவுன் -
பகடிவதைக்கு உள்ளாகி சித்திரவதை செய்து மரணத்தைத் தழுவிய மாணவர் டி.நவீனின் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் மீதான விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவிமடுப்புக்கு வந்த இவ்வழக்கி சவப்பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைக்காததால் டிசம்பர் 6ஆம் தேதிக்கு அடுத்த செவிமடுப்பை ஒத்தி வைப்பதாக மாஜிஸ்திரேட் நூர் ஃபாட்ரினா சுல்கைரி உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 9ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு மேல் உணவு வாங்கச் சென்ற நவீனை ஐவர் கொண்ட கும்பல் சித்திரவதை செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இது தொடர்பில் 18 வயதான ஜே.ராகசுதன், கோகுலன் உட்பட 16,17 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும்செக்ஷன் 302இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment