Wednesday 13 September 2017

அதிபர் டிரம்பை சந்தித்தார் பிரதமர் நஜிப்

வாஷிங்டன் -
அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை  வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

இவ்விரு தலைவர்களின் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்பு, வர்த்தகம் சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இச்சந்திப்பு குறித்து குறித்து பேசிய அதிபர் டோனால்ட் டிரம்ப், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியா தனது நட்புக்குரிய பங்காளி நாடாக திகழ்ந்து வருவதற்கு அமெரிக்கா நன்றி பாராட்டுகிறது என்றார்.
"நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்குக் கிடைத்த கௌரவம்" என்றும் இஸ்லாமிய தீவிரவாதக் கும்பலான ஐ.எஸ். அமைப்பைக் கட்டுப்படுத்தும் அனைத்துலக முயற்சிகளில் மலேசியா முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் அவர் சொன்னார்.

மேலும், அமெரிக்காவின் முக்கியமான வர்த்தக, முதலீட்டுப் பங்காளியாக மலேசியா விளங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 4,200 கோடி வெள்ளி மதிப்புடைய விமானங்களை வாங்குவதற்கு மலேசியா இணங்கி இருப்பதை அதிபர் டிரம்ப் சுட்டிக் காட்டினார்.
இது குறித்து கருத்துரைத்த பிரதமர் நஜிப், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா மிகத் தீர்க்கமாக இருந்து வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்காவின் திட்டத்தில் நம்பகமான கூட்டாளியாக மலேசியா இருந்து வரும் என்று தாம் ஏற்கெனவே அளித்த உறுதிப்பாட்டை  அதிபர் டிரம்பிடன் பிரதமர் நஜிப் நினவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment