Monday 25 September 2017

தனிப்பட்ட கொள்கைகள்- மாறுபட்ட சிந்தனைகள்; அதுவே எதிர்க்கட்சி- பிரதமர் சாடல்

கோ.பத்மஜோதி, படங்கள்: வி.மோகன்ராஜ்
கோலாலம்பூர்-
தனிப்பட்ட கொள்கைகள், மாறுபட்ட சிந்தனைகளை கொண்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணியால் மலேசியர்களுக்கு சிறந்ததொரு ஆட்சியை வழங்க முடியாது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சாடினார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள துன் மகாதீர் ஒரு கொள்கையை கொண்டுள்ளார், டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு கொள்கையை கொண்டுள்ளார், லிம் கிட் சியாங் கூட மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கலாம்.
இத்தகையதொரு மாறுபட்ட சிந்தனையும் தனிபட்டகொள்கையும் மலேசியாவின் சிறப்பான ஆட்சிக்கு ஒத்துவராது.

தனிகொள்கையும் மாறுபட்ட சிந்தனையும் கொண்டுள்ள தலைவர்களே எதிர்க்கட்சியில் உள்ளனர். இத்தகையதொரு சித்தாந்தபோக்கு மலேசியாவுக்கு ஏற்புடையதல்ல.

ஒன்றிணைக்கப்படாத கொள்கையும் சிந்தனையும் கொண்ட எதிர்க்கட்சியினரால் நாட்டுக்குதான் பாதகம் ஏற்படும். இது ஒரு அபாயகரமானதும் கூட என டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.

No comments:

Post a Comment