Wednesday 27 June 2018

இந்தியர்களின் அடையாள ஆவணப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்- சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் தீராத பிரச்சினையாக இருக்கின்ற குடியுரிமை பிரச்சினைக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகளில் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சினையும் ஒன்றாகும்.

பக்காத்தான் கூட்டணி தற்போது மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டையை நீல நிற அடையாள அட்டையாக மாற்றுவதற்கு இலக்கு கொண்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு ஒரு குழுவாக இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

100 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண முடியும் என நம்புகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு, இலாகாக்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்று சேவியர் ஜெயகுமார் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment