Thursday 21 June 2018

மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்

வாஷிங்டன்-
அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹலே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான, சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment