Saturday 23 June 2018

நாட்டின் கடனை அடைக்க வெ.92 மில்லியன் நிதி திரண்டது

புத்ரா ஜெயா-
நாட்டின் கடனை அடைக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தொடங்கிய 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு  இன்று வரை 92 மில்லியன் வெள்ளி நன்கொடை திரண்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நாட்டின் கடன்  1 டிரில்லியன் வெள்ளி (ஒரு லட்சம் கோடி வெள்ளி) என அறிவித்தது.

இந்த கடனை அடைக்க கடந்த மே 30ஆம் தேதி தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு இன்று பிற்பல் 3.00 மணி வரை வெ.92,108,427.94 நிதி திரண்டுள்ளது என நிதியமைச்சின் அகப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment