Sunday 24 June 2018

தேமுவிலிருந்து விலகியது கெராக்கான் கட்சி


கோலாலம்பூர்-
தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக பார்ட்டி கெராக்கான் மலேசியா (கெராக்கான்) இன்று அறிவித்துள்ளது. இக்கூட்டணியிலிருந்து வெளியேறி சுயேட்சை கட்சியாக செயல்படவிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெராக்கான் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் 14ஆவதுபொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியாக மாறியுள்ள சூழலில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுயேட்சை கட்சி எனும் நிலையில் இனி மக்களுக்காக குரல் கொடுக்கவும் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்ததை செய்ய கெராக்கான் கட்சி செயல்படும்.

சுமூகமான முறையில் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் கெராக்கான் கட்சி, சுயேட்சை கட்சி எனும் நிலையில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்துடன் கலந்து பேசி செயலாற்றும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment