Saturday 23 June 2018

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் பேங்க் நெகாரா கவனம் செலுத்தும்- புதிய கவர்னர்

புத்ராஜெயா-
நாட்டின் பொருளாதார நிலையை உறுதி செய்யும் வகையில் அதில் முக்கியத்துவம் வழங்குவதை பேங்க் நெகாரா கவனத்தில் கொள்ளும் என பேங்க் நெகாராவின் புதிய கவர்னர் டத்தோ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் கூறினார்.

நாட்டின் நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக பொருளாதார நிலைத்தன்மை சிறப்பாக அமைந்திடுவதற்கு பேங்க் நெகாரா தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என அவர் சொன்னார்.

பேங்க் நெகாராவின் புதிய கவர்னராக டத்தோ நோர் ஷம்சியா நியமனம் செய்யப்படுவதை நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

நோர் ஷம்சியாவின் நியமனம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும்.

No comments:

Post a Comment