Tuesday 26 June 2018

ஃபினாஸின் நிதி விநியோகம் சீரமைப்பு செய்யப்பட வேண்டும்- அமைச்சர் கோபிந்த் சிங்

பெட்டாலிங் ஜெயா-
மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில்  (ஃபினாஸ்) மிகப் பெரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது மட்டுமல்லாது அதன் அடித்தளம் முழுவதும் சீரமைக்கப்படுவது அவசியம் என தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

குறிப்பாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது மிக முக்கியமானதாகும்.

நிதி விநியோகம் செய்யப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதை காண முடிகிறது எனவும் அது தொடர்பில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு ஒழுங்காக, சீரான முறையில் நிதி  விநியோகம் செய்யப்படுவது மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளில் முதன்மையானதாகும்.

திரைப்படத் துறையில் ஈடுபடவிருக்கும் புதியவர்களின் நிலையை உணர்ந்திருப்பதாகவும் அவர்களுக்கு உதவிடும் வகையில் முன்னெடுக்கப்படும் சீரமைப்புகளின் வழி நிதி விநியோகம் முறையாக அவர்களை சென்றடைவது உறுதிபடுத்த வேண்டும் என இன்று பெட்டாலிங் ஜெயா, ஜாலான் உத்தாரவில் உள்ள பினாஸ் அலுவகத்திற்கு வந்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment