Thursday 21 June 2018

அல்தான் துயா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் ஒப்புதல்- வழக்கறிஞர்

புத்ராஜெயா-
சுட்டு கொலை செய்யப்பட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்ட மங்கோலியா மாடல் அழகி அல்தான் துயா ஷாரிபு  கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்துவதற்கு பிரதமர் துன் மகாதீர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

பிரதமர் துன் மகாதீரை அல்தான் துயாவின் தந்தை ஷாரீபு ஸ்டீவ் சந்தித்த பின்னர் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த வழக்கை மீண்டும் ஏன் நடத்த வேண்டும் என்பதற்கான உண்மை காரணங்களை குறிப்பாக 'கொல்ல உத்தரவிட்டது யார்' என்ற உண்மையை வெளிகொணர வேண்டும் என்ற விளக்கத்தை அளித்த பின்னர் சட்டவிதிகளுக்கு ஏற்ப இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என வழக்கறிஞர் ராம் கர்ப்பால் கூறினார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அல்தான் துயா வழக்கு தொடர்பான புகாரை ஷாரிபு ஸ்டீவ் வழங்கினார்

No comments:

Post a Comment