Saturday 23 June 2018

எலி சிறுநீர் துர்நாற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்; தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
எலி சிறுநீர் துர்நாற்றத்துடன் கல்வி பயிலும் அவலநிலை நீடிக்கும்  ஆயர் தாவார், கொலம்பியா தமிழ்பள்ளியில் பரிசோதனை நடத்துமாறு மாநில சுகாதார இலாகாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த புதன்கிழமை இப்பள்ளிக்குச் சென்றபோது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள எலி சிறுநீர் நுர்நாற்றத்தில் நம் பிள்ளைகள் பயில்வது கொடுமையான ஒன்றாகும்.

இப்பள்ளியில் காலடி வைத்த உடனேயே இந்த துர்நாற்றத்தை உணர்ந்ததாகவும் தம்மாலேயே சில நிமிடங்கள் சகித்து கொள்ள முடியாத நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களின் நிலையை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் 60 மாணவர்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் பள்ளியில் பரிசோதனை நடத்துமாறு மாநில சுகாதார இலாகாவை கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட சிவநேசன், தமிழ்ப்பள்ளிகள், மாணவர்களின் நலனில் தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களின் கல்வி பாதிப்பு மட்டுமல்லாது சுற்றுச்சூழல், கட்டமைப்பு பாதிப்புகளையும் கவனித்து அவற்றுக்கு தீர்வு காண முற்படுவதாக கூறினார்.

No comments:

Post a Comment