Saturday 23 June 2018

உணவங்களில் உள்ளூர் சமையல்காரர்களை பணியில் அமர்த்துக- அமைச்சர் உத்தரவு

புத்ராஜெயா- 
அடுத்தாண்டு ஜனவரி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் சமையல்காரர்கள்  பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் சமையல்காரர்கள் பணியாற்றுவது அவசியமாகும். இதல் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டோம். ஜூலை 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை உணவக நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த கால அவகாசத்தில்  உள்ளூர் சமையல்காரர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவர்கள் பணியாற்றுவதில்  உணவகங்கள் ஊக்குவிக்க வேண்டும். இதில் உள்ள பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும். அதற்கேற்ப தேவையான உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் (பிரிஸ்மா), மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கம் (பிரெஸ்மா) ஆகியவற்றுடனான சந்திப்பின்போது குலசேகரன் இவ்வாறு வலியுறுத்தினார்.

உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் பணியாற்றும் நடைமுறை பினாங்கில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது நாடு தழுவிய நிலையில் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment