Thursday 28 June 2018

ஆர்டிஎம்- பெர்னாமா ஒருங்கிணைப்பு; பரிசீலிக்கப்படுகிறது - அமைச்சர் கோபிந்த் சிங்


கோலாலம்பூர்-
செலவீனங்களை குறைக்கும் வகையில் ஆர்டிஎம் எனப்படும்  மலேசிய வானொலி, தொலைகாட்சி நிறுவனத்தையும் பெர்னாமாவையும் இணைக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த இரு நிறுவனங்களையும் இணைப்பதன் மூதல் கிடைக்கும் சேமிப்பு பணத்தைக் கொண்டு இன்னும் புதுமையான, ஆக்ககரமான உள்ளடக்கத்தை உருவாக்க முடியும்.

இதன் தொடர்பில் சிலர் மதிப்பீடுகளை செய்து வருகின்றனர். அவர்களின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மேலும், பெர்னமாவின் கீழ் இயங்கும் 24 மணி நேர செய்தி அலைவரிசையை விற்பது தொடர்பில் எவ்வித திட்டமும் இப்போது இல்லை என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment