Thursday 24 May 2018

பதவி விலகினார் பிடிபிடிஎன் தலைவர்

பெட்டாலிங் ஜெயா-
பிடிபிடிஎன் எனப்படும் கல்வி கடனுதவி திட்டத்தின் தலைவர் டத்தோ ஷம்சுல் அன்வார் நசாரா அதன் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டதைத் தொடர்ந்து, தாம் இந்த பதவியிலிருந்து விலகுவதற்கு கடந்த 15ஆம் தேதி தனது ராஜினமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து டத்தோ ஷம்சுல் இந்த பதவியை தற்காத்து வருகிறார். தற்போது லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலும் அம்னோ உயர்மட்ட குழுவிலும் மட்டுமே பதவி வகிப்பதாக அவர் கூறினார். 

No comments:

Post a Comment