Wednesday 23 May 2018

1எம்டிபி: கெவின் மொராஸுக்கு சம்பந்தமில்லை- எம்ஏசிசி தலைமை ஆணையர்



கோலாலம்பூர்-
கொலைசெய்யப்பட்ட அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கெவின் மொராஷூக்கும் 1எம்டிபி விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ சுக்ரி அப்துல் தெரிவித்தார்.

கெவின் மொராய்ஸ் 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தமில்லை, மாறாக மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்கும் ஊழல் விவகாரத்தில் அவர் எம்ஏசிசிக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்ப்பு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு செம்படம்பர் 4ஆம் தேதி கெவின் மொராய்ஸ் காணாமல் போனதாகவும் பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது என்றார் அவர்.




No comments:

Post a Comment