Thursday 17 May 2018

துணை முதல்வராக பொறுப்பேற்றார் பேராசிரியர் இராமசாமி


ஜோர்ஜ்டவுன் -
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தக்க வைத்துக் கொண்ட நிலையில் துணைமுதல்வராக பேராசிரியர் பி.இராமசாமி மூன்றாம் தவணையாக பதவியேற்றுக் கொண்டார்.

முதலமைச்சராக சோவ் கோன் இயோ பதவி வகிக்கும் நிலையில் முதலாவது முதலமைச்சராக பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஐ.ஆர்.ஜக்கியுடின் அப்துல் ரஹ்மான் பதவியேற்ற நிலையில்  பேராசிரியர் இராமசாமி இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இன்று டேவான் ஶ்ரீ பினாங்கில் மாநில ஆளுநர் துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸ், முதலமைச்சர் சோவ் கோன் இயோ ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு சடங்கில்  நடைபெற்றது.

பேராசிரியர் இராமசாமி பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதனம், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment