Thursday 24 May 2018

நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது வெ.120 மில்லியன்?


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டுள்ளதாக தி ஸ்டார் நாளிதழ் தகவல் வெயிட்டுள்ளது.

கடந்த மே மாதம்  21ஆம் தேதி முதல் இந்த பணத்தை எண்ணத் தொடங்கினர்.  சுமார் 30 பெட்டிகளிலிருந்த மொத்த பணத்தையும்  பேங்க் நெகாரா அதிகாரிகளின் உதவிகளுடன் போலீசார் எண்ணினர்.

அனைத்து பெட்டிகளிலிருந்தும் எண்ணப்பட்ட பணத்தின் மொத்த தொகை  120 மில்லியன்    ஆகும். விலைமதிப்புள்ள கைப்பை, கடிகாரம் உட்பட அயல் நாட்டு நோட்டுகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment