Friday 18 May 2018

பக்காத்தான் ஹராப்பானின் பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொண்டார் துன் மகாதீர்


பெட்டாலிங் ஜெயா-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆர்.ஓ.எஸ் எனப்படும் தேசிய பதிவிலாகா பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் சான்றிதழை பிரதமர் துன் மகாதீர் பெற்றுக் கொண்டார்.

உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ அல்வி இப்ராஹிம் பெர்சத்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் இச்சான்றிதழை ஒப்படைத்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பதாக விண்ணப்பிக்கப்பட்ட இப்பதிவை ஆர்ஓஎஸ் நிராகரித்த வேளையில் தற்போது ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியுள்ளதால் அக்கூட்டணியின் பதிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment