Tuesday 29 May 2018

ஈப்போ இந்தியர் மேம்பாட்டு இயக்கம், ஈப்போ மக்கள் சமூகநல இயக்கம் ஏற்பாட்டில் 'அன்னையர் தின விழா'




புனிதா சுகுமாறன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஈப்போ இந்தியர் மேம்பாட்டு இயக்கம், ஈப்போ மக்கள் சமூகநல இயக்கம் ஆகியவை இனைந்து மிக விமரிசையாக அன்னையர் தின விழவை தாமன் ரிஷா பெர்மாயில் கொண்டாடியது.

இந்நிகழ்வில் ஈப்போ இந்தியர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவி திருமதி லெட்சுமி தலைமையுரை ஆற்றுகையில், கடந்த 6ஆண்டு காலமாக அன்னையர் தினத்தை கொண்டிவருவதாகவும் நம்மை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் அவர்களின் தியாகத்திற்கும் இந்த தினம் சமர்பணம் ஆகும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜிபி  ஃபூட் கோர்ட் (GP food Court) நாசி கண்டார் உரிமையாளர் திருமதி சுமதி, அன்னையரின் புகழை பேச தமக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்ததுடன் தாம் இன்று ஒரு கடையின் உரிமையாளராக வலம் வர தமது தாயார் ஒரு முக்கிய காரணம் என்று தமது உரையில் தெரிவித்தார்

மேலும் இந்நிகழ்வில் அன்னையர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு அனிச்சல் வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment