Tuesday 29 May 2018

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரிக்கு சிவநேசன் உதவிக்கரம் நீட்டினார்


புனிதா சுகுமாறன்

ஈப்போ:
பக்கவாத நோயோடு 2 பிள்ளைகளுடன் மிகவும்  வறுமையான சூழலில் வாழும்  தனித்து வாழும் தாயாரான திருமதி ஆர்.முனீஸ்வரிக்கு (32) பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் உதவிக்கரம் நீட்டினார்.

கணவரால் கைவிடப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற ஃபர்ஸ்ட் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில்  வாழ்ந்து வருவதாகவும் 3 மாத வாடகை பணம் செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் சமூகநல உதவித் தொகை வெ.200 மட்டுமே கிடைத்து வருவதாகவும் திருமதி முனீஸ்வரி கண்ணீர் மல்கக் கூறினார்.

திருமதி முனீஸ்வரியின் பிரச்சினைகளை கேட்டறிந்த சிவநேசன், அவரின் தற்போதைய நிலைமையை சரி செய்ய அம்மாதுவுக்கு மாநகராட்சி அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவதாகவும்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment