Saturday 4 November 2017

எந்திரன் வசூலை முறியடித்தது 'மெர்சல்'

சென்னை-
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக்கியது 'மெர்சல்' திரைப்படம்.  இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். அனைத்து தடைகளையும் தாண்டி 'மெர்சல்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாயைக் வசூலித்த 'எந்திரன்'. படத்தின் வசூலை பாகுபாலி 2 முறியடித்தது.. இருந்தாலும் 'பாகுபாலி 2' சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. மெர்சல் படம் அதை முறியடித்துள்ளது.

'எந்திரன்' படத்தின் தமிழ்நாட்டு வசூலான 108 கோடியை முறியடித்துள்ள 'மெர்சல்' தன்னுடைய மொத்த வசூல் முடிவில் 'பாகுபாலி2' வசூலை முறியடித்து முதலிடத்தை பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'மெர்சல்' படம் இன்னும் ஒரு வாரம் ஓடினால் கூட தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment