Monday 27 November 2017

பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியது 59ஆம் ஆண்டு பிறந்த நண்பர்கள் இயக்கம்


சுங்கை சிப்புட்-
59ஆம் ஆண்டு பிறந்த அன்பர்கள், அண்மையில் காந்தி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி 46 ஏழை இந்திய மாணவர்களுக்கு சீருடைகளை அன்பளிப்புச் செய்து உதவினர்.

59ஆம் ஆண்டு பிறந்த நண்பர்களின் மூலம்  உதவிகளை திரட்டப்பட்டு இந்த உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 59ஆம் ஆண்டு பிறந்த நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் ஆ.சுந்தரா,  உதவி தலைவர் கி.கருணாகரன்,               பொருளாளர் க.சுகுமாரன், செயலாளர் ச.கணேசன் ஆகியோர் உட்பட இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழுத் தலைவர் தலைமை ஆசிரியர் சி.வீரமுத்து ஆகியோர் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment