Saturday 25 November 2017

"மக்களுக்கான வேட்பாளரை களமிறக்குவதுதான் வெற்றியை உறுதி செய்யும்" - சுங்கை சிப்புட் இளங்கோ- பகுதி - 2

நேர்காணல்: ரா.தங்கமணி

மக்கள் விரும்பும் வேட்பாளரை களமிறக்குவதில்தான் தேசிய முன்னணியின் வெற்றி அடங்கியுள்ளது. அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்பாளரை  அடையாளம் கண்டு களமிறக்க வேண்டியது அவசியமாகும் என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

''பாரதம்" மின்னியல் ஊடகத்துடனான இளங்கோவனுடனான நேற்றைய நேர்காணலின் தொடர்ச்சி இது...

கே: 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றியை உறுதி செய்யும் வேட்பாளர் யார்?

: இத்தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் வேட்பாளர் யார்? என ஆராய்வதை விடை வெற்றியை தக்கவைத்துக் கொள்வது மிக முக்கியமானதாகும்.
வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைத்துவம் அடையாளம் கண்டு சமூகச் சேவையின் வழி மக்களை அணுக வேண்டும். மக்களிடையேயான நெருக்கமும் தொடர்பும்தான் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும்.

ஏனெனில் இங்கு மக்கள் சேவைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு வேட்பாளரை களமிறக்கி சேவையாற்ற வேண்டும்.
கே: திரளாக அணிவகுக்கும் உள்ளூர் வேட்பாளர்கள் குறித்து?

:  உள்ளூர் வேட்பாளர் இத்தேர்தலில் களமிறக்கப்படும் சூழல் வெற்றிக்கு சாத்தியமான ஒன்றுதான். ஆயினும் அதனை கட்சி தலைமைத்துவம்தான் முடிவு செய்ய வேண்டும். உள்ளூர் வேட்பாளராக பலர் களமிறங்கியுள்ள போதிலும் மக்களின் சேவையை முன்னெடுக்கின்றனர். அதனை தொகுதி மஇகா வரவேற்கிறது. வெற்றியை வாய்ப்பை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

மக்கள் விரும்புபவரையே தேசிய முன்னணி வேட்பாளராக களமிறக்கும் என கூறப்படும் வேளையில் அதனை தொகுதி மஇகா வரவேற்கிறது.

கே: தொகுதி தேசிய முன்னணி தலைவர் பதவி மஇகாவிடமிருந்து பறிபோனது பற்றி...?

: தொகுதி தேமு தலைவர் பதவி ம இகாவிடமிருந்து ஒருபோதும் பறிபோகவில்லை. கடந்த இரு தவணைகளாக இத்தொகுதியில் தேமு வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர். ஆனால் லிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் அம்னோ வேட்பாளர் வெற்றி பெறுகிறார்.
இம்முறை தேமு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் இப்பதவியை அம்னோ கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தல்களில் நாம் ஓர் அமைச்சரையும் ஒரு துணை அமைச்சரையும் இழந்து விட்டோம். இத்தகைய சூழலில் தேமு தலைவர் பதவி விட்டுக் கொடுத்ததை பெரிய விவகாரமல்ல.

இத்தொகுதியில் தேமு  மீண்டும் வெற்றி பெற்றால் அந்த பதவி நாளை மீண்டும் மஇகாவிடமே திரும்பும்.
- தொடரும்-

No comments:

Post a Comment