Wednesday 29 November 2017

மினி மார்க்கெட்டில் கொள்ளை; கடை உரிமையாளர் 'கொலை'


ஈப்போ-
மினி மார்க்கெட் ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் அக்கடை முதலாளியை கொலை செய்ததோடு 80,000 வெள்ளியை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் இங்கு ஜெலாப்பாங்கிலுள்ள மினி மார்க்கெட்டில் நிகழ்ந்தது.

கடையின் மேல் மாடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கடை உரிமையாளர் செம் ஆ யெம் (வயது 69) உடல் கிடந்தது.

கடையின் கூரையை விலக்கி, கயிறை உபயோகித்து கடையினுள் நுழைந்த கொள்ளையர்கள், ஓர் ஆயுதத்தைக் கொண்டு செம் ஆ யெம்மின் தலைப்பகுதியில் தாக்கியிருக்கலாம் என ஈப்போ ஓசிபிடி துணை ஆணையர் முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து இன்று காலை 8.00 மணிக்குள் இந்த கொலை நடந்திருக்கலாம். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ரத்தம் படிந்த உலோகக் குழாய் ஒன்றை கண்டெடுத்துள்ளோம்.  இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

கொலை செய்யப்பட்ட செம் ஆ யெம் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்தவர் ஆவார்.

No comments:

Post a Comment