Friday 29 December 2017

பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் அன்பளிப்பு


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
அடுத்தாண்டு பள்ளிச் செல்லும் மாணவர்களுக்காக தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி), இகுய்டி நேஷனல் பெர்ஹாட் (இகுய்னெஸ்) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இங்குள்ள 7 தமிழ்ப்பள்ளிகள், 3 இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

பள்ளி செல்லும் மாணவர்களால் பெற்றோர்களுக்கு ஏற்படக்கூடிய சுமையை குறைக்கும் வகையில் வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

பிரதமர் துறை துணை அமைச்சரும் மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி இந்த புத்தகப்பைகளை மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.

சுங்கை சிப்புட் மஇகா கல்வி குழு பொறுப்பாளர்கள் சுண்முக வேலு, சுலைமான் ஆகியோர் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில்  சுங்கை சிப்புட் மஇகா தலைவர்  இளங்கோவன் முத்து, செயலாளர் கி.மணிமாறன், பேராக் மாநில டிஎன்பி வாரிய இயக்குனர் செல்வராஜு,  இகுய்னெஸ் அதிகாரிகள், பாடாங் ரெங்காஸ் மஇகா தொகுதித் தலைவர் சேகரன், சுங்கை சிப்புட் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி விஜயகுமாரி உட்பட கிளைத் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment