Saturday 30 December 2017

புற்றுநோய் பாதிப்பு; மகளை கொலை செய்த பின் தாய் தற்கொலை

ஜோகூர்பாரு-
தனது 10 வயது மகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஓர் இந்திய  குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் ஜோகூர் பாரு, தாமான் ஸ்கூடாய் இண்டா எனுமிடத்தில் நேற்று இரவு நிகழ்ந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குடும்ப மாதான திருமதி சுமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது மகள் அர்த்தினி கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான சுமதி இரவு 7.00 மணியளவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதோடு சிறுமியின் கழுத்து பகுதியில் நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிவதாக ஜோகூர்பாரு துணை ஓசிபிடி சூப்பிரிடென்டண்ட் பே எங் லாய் தெரிவித்தார்.

பள்ளித் தவணை தொடங்கவுள்ளதால் அப்பெண்ணின் கணவரும் அவரின் 16, 19 வயதுடைய இரு மகன்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தம்போயிலுள்ள பேரங்காடிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய சுமதியின் கணவர் கிருஷ்ணகுமார், வீட்டின் மேல் மாடியில் உயிரற்ற மகளின் உடலை கண்டுள்ளார்.  அவரின் மனைவி ஜிம் அறையில் தூக்கு மாட்டிக் கொண்டதை கண்டு அதிர்ச்சிக்குள்ளான அவர், இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment