Thursday 28 December 2017

கார்- லோரி மோதல்: மனைவி கண்ணெதிரே கணவன் தீக்கிரை


ஜோகூர் பாரு-
டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளான காரில் சிக்கிக் கொண்ட கணவர்,  மனைவியின்  கண்ணெதிரே தீக்கிரையான இங்கு நிகழ்ந்தது.
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் மூன்று வயது குழந்தை, 30 வயதான மனைவியுடன் வாகனத்தில் பயணித்த 29 வயது ஆடவர், லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் இருக்கையில் சிக்கிக் கொண்டார்.

காரில் தீ பரவ ஆரம்பித்ததும் பின்னருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணையும் குழந்தையும் பொதுமக்கள் மீட்டனர். இருக்கையில் சிக்கிக் கொண்ட ஆடவரை மீட்பதற்குள் தீ வேகமாக பரவியதால் ஆடவரை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, காரில் சிக்கி தீக்கிரையான அந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்காக கூலாய் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என தீயணைப்பு, மீட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்  அஸிஸான் அஸிஸ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் மளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment