Thursday 28 December 2017

'திருடன்' என சந்தேகித்தில் ஆடவர் அடித்துக் கொலை; ஐவருக்கு தூக்கு- நீதிபதி தீர்ப்பு


கோலாலம்பூர்-
'திருடன்' என்ற சந்தேகத்தின்பேரில் ஓர் ஆடவரை அடித்துக் கொன்ற ஐந்து ஆடவருக்கு தூக்குதண்டனனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செந்தூல், தாமான் இந்தான் பைடூரி பகுதியிலுள்ள வி-க்ளம் ஸ்னூக்கர் மையத்தின் முன்புறம் கடந்தாண்டு மே 1ஆம் தேதி 'திருடன்' என சந்தேகப்பட்ட முகமட் யூசோப் அப்துல் காலீம் என்ற ஆடவரை கடுமையாக தாக்கி மரணம் விளைவித்ததாக அம்மையத்தின் பாதுகாவலரான எம்.யோகேஸ்வரன், இராணுவ அதிகாரிகளான முகமட் ஹைரூல் அப்துல்லா, லாரன்ஸ், ஸைடி ஸைனால், மேற்பார்வையாளரான சோங் காய் வேங் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த ஐவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இவர்களுக்கு தூக்குதண்டனை விதித்து நீதிபதி ஆணையர் முகமட் ஷாரீஃப் அபு சாமா தெரிவித்தார்.

"பொதுமக்களைப் போன்றே தாங்கள் அந்த ஆடவரை தாக்கி போலீசில் ஒப்படைக்க முயன்றதாக அந்த ஐவரும் கூறுவதை நீதிமன்றம் ஏற்காது" என கூறிய நீதிபதி, "ஒருவர் திருடனாகவே இருந்தாலும் அவரை அடித்துக் கொல்வது தவறாகும்" என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

கடுமையான தாக்குதலுக்கு ஆளான சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் உயிரிழந்தார்.

No comments:

Post a Comment